சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014
மேஷ ராசி நேயர்களுக்கு,
மேஷம் என்பது இராசி மண்டலத்தில் முதல் இராசி ஆகும். இது காண்பதற்கு ஆடு போல தோற்றமளிப்பதால் ஆடு போல தோற்றமளிப்பதால் ஆடு எனும்பொருள் தரும் "மேஷம்" எனும் பெயர் வந்தது. இது பூஜ்யம் பாகை முதல் முப்பது பாகை வரையில் காணப்படும். . இந்த இராசிக்குரிய கோள் செவ்வாய் ஆகும். சூரியன் இந்த ராசியில் இருக்கும்பொழுது அந்த மாதத்தை மேஷம் மாதம் என்பர். தமிழில் இந்த மாதத்தினை சித்திரை என்று கூறுவர்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்:
*பொறுமையான நடவடிக்கைகள் தற்போது வேண்டும். சனிக் கிரகமானவர் தற்போது 'ராசிக்கு 7ல் உச்சமாக சஞ்சரிக்க போகிறார். இதன் காரணமாக பொதுவாக பண வருமானம் மட்டும் மிக அதிக அளவில் வரக்கூடும். ஆயினும் செலவுகள் மட்டும் மிக அதிக அளவில் உண்டாகக் கூடும். ஆகவே செலவை கட்டுப்படுத்த வேண்டும்.' அதுவே இப்போது அவசியம்.
* உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் உண்டாகிய மருத்துவச் செலவுகள் குறையும். வளமும் கூடும் காலமாகும்.
* புதிய முயற்சிகள் வெற்றி உண்டாக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பண விஷயத்தில் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும்.
* மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். பொருளாதார முன்னேற்றம் மிகவும் சாதகமாக அமையும். அரசாங்க வழியில் உதவிகள் நெருங்கிய உறவினரகள் பெரியோர்களது ஆலோசனைகள் நற்பலன் ஏற்படுத்தும். கமிஷன் ஏஜென்சி போன்றவை யோகம் கொடுக்கும்.
* ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அதிகாரிகளிடமிருந்து அன்பான அழைப்பும் பரிசும், பாராட்டும், சம்பள உயர்வும் அலுவலர்களிடமிருந்து மதிப்பும் மரியாதையும் எளிதில் கிடைக்கும்.
* பொருட்களை விற்பதில் சாமார்த்தியம் உண்டாகும். புதிய கொள்முதல் மூலம் லாபம் உண்டு. வெளிவட்டார பொருளாதார வகையில் தன்னிறைவை உண்டாக்கித் தரும். கூட்டுத் தொழிலில் யோகம் தராது.
* நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கணவனின் அன்பு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பெருமையும். பூரிப்பும், உண்டாகும். சிலர் புதிதாக வாழ்க்கையை தொடங்குவர். சிலர் வீட்டில் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
*எதிர்ப்பார்த்த மதிப்பெண்கள் எளிதில் வரும். சிலருக்கு தலைமை ஆசிரியரின் பாராட்டும் சான்றிதழும் கிடைக்கும். சிலர் விளையாட்டுத் துறையில் சாதனை செய்வார். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.
* அரசியல்வாதிகளுக்கு, உங்கள் கெளரவம், புகழ், பதவி பெருமை யாவும் கூடும் காலமாகும்.
* எதிர்பார்த்த விளைச்சல் ஏற்றத்தை உண்டாக்கும். புதிய கருவிகள் வாங்குவீர்கள். கரும்பால் பெருத்த யோகம் உண்டாகும். உங்களின் விளை பொருளுக்கு ஏற்படும் பற்றாக்குறையால் சாதகமான லாபங்களை அடைந்து தன்னிறைவை அடைவீர்கள்.
* விருதுகள் கிடைக்கும். பலரின் ஏகோபித்த பாராட்டும் வந்து சேரும். அரசால் ஆதரவு கூடும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். திடீர் தனவரவு உண்டாகும்.
நட்சத்திர பலன்கள் :
* அசுவினி : உங்கள் குடும்ப வாழ்வு சீராக இருக்கும். குடும்பத்தில்; சுபகாரிய முயற்சியால் பொருள் செலவு உண்டாகும். கொடுக்கல் - வாங்கல் திருப்தியைக் கொடுக்கும்.
* பரணி: கணவன் - மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும். புதிய முதலீடு செய்து புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
* கிருத்திகை 1 ஆம் பாதம்:
திருமணம் நடை பெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.புதிய செலவுகள் ஏற்படும். வீண் அலைச்சல் வெளியூர், பயணம் உண்டாக்கும்.
தெய்வ வழிபாடு:
* முருகப் பெருமான் வழிபாடு சிறப்பான பலனைத் தரும் . அறுபடை வீடுகள், வயலூர், குன்றக்குடி, விராலிமலை, திருத்துறைப் பூண்டி, வடபழனி, எட்டுக்குடி போன்ற முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களை வழிபட்டு வரலாம். கார்த்திகை விரதம், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளலாம். வைகாசி விசாகத் தன்று முருகனை தரிசனம் செய்யலாம். முருகனைப் போன்றே வீரியமுள்ள வீரபுத்திரர், கருப்பசாமி, மாடசாமி, வனக்காளி, பத்ரகாளி போன்ற தெய்வங்களை வழிபட்டு வருவதும்; நன்மை தரும்.
ரிஷப ராசி நேயர்களுக்கு,
வான மண்டலத்தில் இது இரண்டாவது இராசியாகும். இது காண்பதற்கு காளை போல் தோற்றம் அளிப்பதால் காளை என்று பொருள் தரும். "ரிஷபம்" எனப்படும். இந்த ராசியில் சூரியன் இருக்கும்போது அந்த மாதத்தை ரிஷப மாதம் என்பர். தமிழில் இந்த மாத்த்தினை வைகாசி மாதம் என்று கூறுவர்.
சந்திராஷ்டமம்:
* ரிஷபம் இராசியில் ஜெனனம் ஆனவர்களுக்கு இராசிக்கு எட்டாம் இடமான தனுசுவில் சந்திரன் உலாவரும் காலம். அதாவது மூலம், பூராடம், உத்திராடம், 1 ஆகிய நட்சத்திர காலம் சந்திராஷ்டமம் எனப்படும். இந்தக் காலங்களில் வாதம்புரிதல்,மேலோரைக்காணல், முக்கிய முடிவுகள் எடுத்தல் கூடாது. சனிப்பெயர்ச்சி பலன்கள்:
* உங்கள் ராசிக்கு சனிபகவான் 6ல் சஞ்சரிக்கிறார். என்றால் நீங்கள் வெற்றி தேவதையை பரிசாகப் பெற்றவர்கள் எனலாம்.
* எதிலும் இரட்டிப்பு பொருள் வரவும், உயர்ந்த நடையும் உண்டாகிவிடும். யாருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பான நற்பலன் உண்டாகிவிடும். அரிதான செயல் வெற்றி அற்புதமாக உண்டாகும். என்றாலும் வியாழனின் சஞ்சாரம் நல்லபடியாய் இல்லை என்பதால் எச்சரிக்கையாக எக்காரியத்திலும்ம் ஈடுபாடு வேண்டும். நண்பர்கள் மற்றும் யாவரிடமும் எச்சரிக்கை வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.இது உங்களுக்கு பொற்காலம் என்றே கூற வேண்டும். கணவன்- மனைவி உறவி அற்புதமாக இருக்கும். உறவினர்களால் நற்பலன் உண்டாகும். பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும்.
* கொடுக்கல், வாங்கலில் அனுகூலமும் எதிர்பார்த்த பொருள் வரவு திடீரென்று கிடைக்கும். நிலபுலங்களால் சிலருக்கு நல்ல லாபம் கிட்டும். சிலருக்கு திடீரென்று வெளியூர், பயணங்களால் நன்மை ஏற்படும்.
* சக தோழர்களின் ஒத்துழைப்புக்கள் உண்டாகும். அதிகாரிகளின் அனுகூலம் சாதகத்தைத் தரும்படியாக இருக்கும். சிலருக்கு இடமாற்றம் அமையும். தனியார் துறையில் இருப்போர் சற்று கவனமுடன் இருக்கவும்.
* வியாபாரம் எதிர்பார்த்ததை விட நம்மையான பலன் ஏற்படுத்தும். இரும்பு, துணி சம்பந்தப்பட்ட துறையினர், தவிர ஏனைய வியாபாரம் மிக சாதக மான பலன் ஏற்படுத்தும். கடன், வசூல் திருப்திகரமாக இருக்கும்.
* கணவன்-மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும். உறவினர் நண்பர்களால் நற்பலன் உண்டாகும். வெளியூர், பயணங்கள் சிலருக்கு அமையப் பெறும். குடும்பத்தில் ஸ்திர சொத்து சேர்க்கை, ஆடை ஆபரணங்கள் சேரும் யோகம் யாவும் உண்டாகும்.
* மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் மிகுந்து காணப்படும். தொழிற்கல்வி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது.அரசு வழியில் உதவி பணம் சிலருக்குத் தடையின்றி கிடைக்கும். பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை செய்வீர்கள்.
* எதிரிகளின் பல குரைந்து உங்கள் பலம் கூடும். இனி எந்தப் புதிய முயற்சியிலும் ஈடுபடலாம்.பரிபூரண வெற்றி உண்டாகும். மற்றவர்கள் மதிக்ககூடிய உன்னத நிலையும் உண்டாகும்.
* உங்கள் முயற்சிகள் லாபம் கொடுக்கும். நல்ல அனுகூலத்தைக் கொடுக்கும். மேற்கொண்டு புதிய பராமரிப்பு மற்றும் புதிய யுக்திகளால் வருங்காலத்தை வளப்படுத்திக் கொள்வீர். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
* புதிய பட வாய்ப்புகள் தேடி வரும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் பூரிப்பு ஏற்படித்தும். பயணங்களால் நன்மை உண்டாகும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.
* நட்சத்திரப் பலன்கள்;
கிருத்திகை: 2,3,4 ம் பாதங்கள்:
உங்கள் ராசிகுரிய யோக பலன்கள் கூடுதலாகும். எடுக்கும் காரியம் வெற்றியைக் கொடுக்கும். பொருள் வரவு திருப்தியாக இருக்கும்.
*ரோகிணி: செய்யும் தொழிலில் சிறப்பும்,புதிய முயற்சியில் அனுகூலமும் உண்டாகும். தொழிலில் சிறப்பு ஏற்படும். சிலருக்கு புதிய பொறுப்பு வரும். ஏற்றுக் கொள்ளவும்.
* மிருகசீரிஷம்: 1,2, பாதங்கள்:
உங்களுக்கு மாபெரும் மறுமலர்ச்சி உண்டாகும். அசையா சொத்து அமையும். மனைவி வழி வீட்டாரின் உதவி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
* தெய்வ வழிபாடு:
* அம்மன் வழிபாடு சிறப்பு தரும். சக்தி ஸ்தலங்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்திவர வேண்டும். மதுரை மீனாட்சி காஞ்சி.காமாட்சி, காசி விசாலாட்சி போன்ற முதன்மை ஆதிக்கம் பெற்ற சக்தி ஸ்தலங்களும், திருநெல்வேலி காந்திமதி குற்றாலம், மடவார் குழலி, கன்னியாகுமரி, பகவதி இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திரூத்திர கோசமங்கை மங்கள் நாயகி, திருஆனைக் காவல் அகிலாண்டேஸ்வரி, மைசூர் சாமுண்டேஸ்வரி சிருங்கேரி சாராதாம்பாள், தாய் மூகாம்பிகை போன்ற ஆதி சக்தியை தரிசனம் செய்ய வேண்டும்.
மிதுனம் ராசி நேயர்களே.
வான மண்டலத்தில் இது மூன்றாவது இராசியாகும். இது காண்பதற்கு ஆண், பெண் என இருவரும் சேர்ந்திருப்பது போல் காட்சி அளிப்பதால் இதை இரட்டையர் என பொருள் தரும் "மிதுனம்" எனப்பெயரிட்டனர். இந்த இராசி வீட்டிற்குரிய கோள்
புதன் ஆகும். சூரியன் இந்த ராசியில் இருக்கும் பொழுது இந்த மாதம் மிதுனமாதம் எனப்படும். தமிழில் இந்த மாதத்தை ஆனி என்பர்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்:
*உங்கள் ராசிக்கு சனிபகவான் 5 ல் உச்சமாக சஞ்சரிக்கிறார் என்றால் ஸ்ரீமகாலக்ஷ்மி யோகத்தை பெற்றுவிட்டீர்கள்என்று அர்த்தம் நிறைவான நற்பலனை எல்லா வழிகளில் தரும் எனலாம். ஆனாலும் உழைப்பு அவசியம். சந்தர்ப்பங்களை விட்டுவிடக் கூடாது. 5 ல் சனியானவர் - சுறுசுறுப்பை தரமாட்டார். எதார்த்தம் புரிந்துக் கொள்ளக்கூடிய பக்குவம் தான் இப்போது வேண்டும். அப்படி உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
*உங்கள் தேக ஆரோக்கியம் மிக அற்புதமாக இருக்கும். ஆனால் சகோத வழியில் கெடுபலன் உண்டாகும். புத்திர வழியில் சந்தோஷம் பூரிப்பு உண்டாகும்.
*கணவன் - மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் குதுகலத்திற்குக்
குறைவிருக்காது. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடுப் பிரயாணம் உண்டாகும். சிலருக்கு நடைபெறும் கேஸ் வெற்றி ஏற்படுத்தும். சிலர் பொருள்களை வாங்குவீர். வெற்றிகள் குவியும்.
*உங்களுக்கு பொருளாதார நிலை மிகவும் அற்புதமாக இருக்கும். எதிர்பாரத தன சேர்க்கை, திடீர் திடீர் என்று ஏற்படும். அரசு வழியில் அனுகூலம்ப் பலன்கள் ஏற்படும்.சிலருக்கு திடீர் என்று ஸ்திர சொத்து சேரும். நினைத்த காரியம் வெற்றி உண்டாகும்.
*படித்து முடித்து வேலையில்லாத இலைகர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். அரசு உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெரிய தொழில் துறையில் இருப்போருக்கு நல்ல லாபம் முன்னேற்றம் கொடுக்கும்.
*ஆடை, ஆபரண அலங்காரப் பொருட்களில் அதிக ஆதாரம் கிடைக்கும். வெளிநாடுத் தொழிலில் மிகுந்த லாபம் தரும். கமிஷன் ஏஜென்சி கோன்ட்ட்ர் மிகவும் யோகம் கொடுக்கும்.கடன் தீரும்.
*எது எப்படி இருந்தாலும் உங்களின் தேவைகளை சாமர்த்தியமாகப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வெளிநாட்டு பொருட்களும் வந்து சேரும். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி பல நடைபெறும்.
*மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்கள் மிக அன்புடன் உதவுவார்கள். அதிக மதிப்பெண் பெற்று ஆசிரியரும்,பெற்றோரும் வியக்கும் வண்ணம் நடந்து கொள்வீர்கள். வெற்றிகள் குவியும்.
*உங்களில் சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். எதிரிகள் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். திடீர் தன வரவு உண்டாகும். புதிய முயற்சி பரிபூரண வெற்றி தரும்.
*விவசாயிகளுக்கு கடன்கள் குறையும். பயிர் நிலையில் மனத் திருப்தி உண்டாகும். பூச்சித் தொல்லைகளைத் திறமையுடன் சமாளித்து விடுவீர்கள்.தானிய உற்பத்தியால் கனிசமான ஆதாரம் உண்டாகும்.
* கலைனர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கும். சிலருக்கு அரசு வழியில் பரிசு, பாராட்டு கிட்டும். இசை பாடல்கள் போன்ற துறையில் இருப்போருக்கு வெற்றிகள் கிடைக்கும்.
நட்சத்திரப் பலன்கள் :
மிருகசீரிஷம் மேலும் மேலும் நல்ல லாபமும் விருத்தியும் கொடுக்கும். ஏஜென்சி, கமிஷன் காண்டிராக்டு போன்றவை லாபகரமாக இருக்கும்.
திருவாதிரை :
குடும்ப வாழ்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் பல நடைபெறும். நீங்கள் எதிபார்க்கும் காரியம் வெற்றி கொடுக்கும். தன வரவு உண்டாகும்.
புனர்பூசம் 1 ,2 ,3 ம் பாதங்கள்:
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு தகுந்த நேரத்தில் கிடைக்கும். கணவன் - மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் தரும்.
தெய்வ வழிபாடு:
விஷ்ணு வழிபாடு சிறப்பு தரும். திருப்பதி வெங்கடசலபதி தரிசனமும், தென் திருப்பதி திருவண்ணாமலை, திருமோகூர் காளமேகப் பெருமாள், நவதிருப்பதிகள்,மதுரை அழகர் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர், திருபுல்லானி அனந்த சயன பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக் கொடுத்த ஆண்டாள் போன்ற எம்பெருமானின் திருத்தலங்கள் சென்று வழிபட்டு வரலாம். வாய்ப்பு கிடைத்தால் விட்டலாபுரம் பாண்டுரங்கன், குருவாயூரப்பன்,பிரயாகை சென்று எம்பெருமான் தரிசனம் கண்டு வரலாம்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
கணிணி பாவிப்பதில் சுகாதாரமாக இருக்க சில குறிப்புகள் கீழே வாசியுங்கள். Repetitive Stress Injuries பொருத்தமற்ற மேசை கதிரைகளை பாவிப்பதன்...
-
... Powered by Cincopa Video Hosting for Business solution. New Gallery 2015/1/5
-
நம் எல்லோருக்கும் கூகிள் எர்த் பற்றி தெரியும். ஆனால் எல்லோருக்கும் கூகிள் எர்த் இல் குறித்த ஒரு இடத்தில் அந்த இடத்திற்கான புகைப்படங்களை எவ்...
-
இன்று நான் பதிவிடுவது Internet download manager ஐ பற்றி ... இந்த IDM மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் இணையத்தில் இருந்து மி...
-
நமது கணணியில் எத்தனையோ போல்டர்களை உருவாக்கி வைத்திருப்போம். இந்த போல்டருக்கு நம் விருப்பம் போல் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி கொள்ள ...
-
நமக்கு பிடித்தமான பாடலை RingTone னாக மாற்றி வைத்து கேட்க ஆசைபடுவோம். ஆனால் இதனை நிறைவேற்ற மூன்றாம் தர மென்பொருளை நாடிச் செல்ல வேண்டும். அப்ப...
-
தேடுபொறி என்றால் அது நம் நினைவிற்கு வருவது கூகுள். கூகுள் நம் அன்றாட வாழ்வில் நம்முடன் இணைந்து விட்டது என்றால் அது மிகையாகாது. அதில் இந...
-
விண்டோஸ் இமேஜ் பைல் பார்மெட்டில் குறிப்பிடதக்கது ஐஎஸ்ஒ பைல் பார்மெட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு ...
-
மொபைல் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களிடம் னில்பேசுவதை விட குறுஞ்செய்தி என்று சொல்லப்படுகிற எஸ்.எம்.எஸ் னுப்புவது தான் மிக அதிகமாக உள்ளது.க...
-
Facebook தளம் Time line எனப்படும் புதிய தோற்றத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய தோற்றத்தின் நோக்கம் Face book ன் எல்லா தகவல்களும் ஒர...